என் அம்மா

மழையென வந்து

என் கண்ணீர்  துடைத்தாய்

காற்றென வந்து

என் மனதை மகிழ்வித்தாய்

கண் இமையாய் இருந்து

என்னை காத்தாய்

கண்ணாடியாய் வந்து

நான் யாரென காட்டினாய்

புத்தகமாய் வந்து

எனக்கு உலகை கற்பித்தாய்

பேனாவாய் வந்து

என் தலைவிதி எழுதினாய்

வார்த்தையாய் வந்து

எனக்கு அர்த்தம் தந்தாய்

வானவில்லாய் வந்து

எனக்கு பல வர்ணங்கள் தந்தாய்

கனவென வந்து

எனக்கு நம்பிக்கை ஊட்டினாய்

விளையாட்டு மைதானமாய் வந்து

என்னை விழுந்தும் எழ வைத்தாய்

தேவதையாய் வந்து

என் வாழ்வை ஆசிர்வதித்தாய்

கடல் போல் சொல்ல இருக்க ,

சிறு துளியாய் இந்த கவிதைத் தொடக்கம்.

%d bloggers like this: