
நிலவொடு இரவு

இரவும் நிலவும் அறியும்
இருளின் அழகை!
வரமாய் நீ வந்தாள்
தவமாய் நான் இருப்பேன்!
உன் புன்னகையில் தேடுகிறேன்
என் வாழ்வின் பெருளை!
கொஞ்சி விளையாடிடும் மழலை
மாறச் செல்ல மகள்,
குறும்பு சண்டைகள் இட்டாலும் உடன் பிறந்தோரை
வழி நடத்தும் அன்பு சகோதரி ,
என்றும் தொடரும் பொறுப்புகளைச் சுமக்க புறப்பட்ட
தைரியமான ஒரு மனைவி,
குழந்தைகளிடம் அளவில்லா அன்பைக் கொட்டி
அவர்கள் அன்பைப் பெற ஏங்கும் ஒரு தாய்,
இவ்வளவு அடையாளம் இருந்தும் நாம்
அனைவரும் தனிமையில் மகிழ்ச்சியாய் இருக்கிறோமா?
இல்லை இதுதான் நாம் என்று மற்றவருக்காக
வாழ்ந்து வாழ்ந்து நம் வாழ்க்கை
ஒரு பெருமூச்சாய் முடியப் போகிறதா?
உருவாக்கிடுகள் ஒரு பதிலை
மற்றவர் பெயர் சேராமல்
ஒரு தனி அடையாளம், அது
எதுவாகினும் அதுவே என்றும் நீ !
உன்னை எண்ணி எண்ணி கனவுகள் கண்டேன்
அடைய எண்ணற்ற முயற்சி செய்தேன்
இரவு பகல் பாராது போராடினேன்
ஓடி ஓடியே பழகிய நான்
நீ கிடைத்த அந்த ஒரு நொடி, மறந்தே போனேன்
மகிழ்ச்சி என்னும் ஒன்று உண்டென்று.
Image source: Google search
வறுமையின் விளிம்பில் இருந்தும்
கனவுகள் கண்டேன்
இன்று என் மனதை நிறைத்திடும் அவை
நாளை வயிற்றையும் நிறைத்திடும் என்ற நம்பிக்கையில் !!